முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி 2024, 10:37 am IST
பகிர்:

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தார். மக்களவையில் இன்னும் சற்று நேரத்தில்  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரப்படும்.

Advertisement

Advertisement

சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள், வரிக் குறைப்பு உள்பட மக்களைக் கவரும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றவுள்ளாா்.

தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி, ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.