இந்தியா

போராட்ட களத்திலேயே இரவு தங்கிய முதல்வர்!

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் நிலுவை தொகை கோரி நடத்திவரும் போராட்டம், கடும் குளிருக்கு மத்தியில் இரவிலும் தொடர்ந்தது. 

கொல்கத்தாவின் முக்கிய பகுதியான மெய்டானில் அம்பேத்கார் சிலை முன்பு மம்தா உள்ளிட்ட திரிணமூல் தலைவர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மாநில அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் அரூப் பிஸ்வாஸ் பானர்ஜி உடன் இரவு போராட்டத்தில் இருந்ததாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு, மேற்கு வங்கத்துக்கு பல்வேறு வகையில் தர வேண்டிய நிலுவை தொகை விடுவிக்கப்படாததால் இந்த போராட்டத்தை திரிணமூல் அரசு கையில் எடுத்துள்ளது.

திங்கள்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்வரை 48 மணி நேரம் இந்த போராட்டம் நீடிக்கும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT