இந்தியா

சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின் தலைமையிடம் இந்தியாவுக்கு மாற்றம்!

சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின் தலைமையிடம், சீனாவில் இருந்துவந்த நிலையில், அதன் தலைமையிடம் இந்தியாவுக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

குவஹாத்தி : சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின்(சிஐடிஎஸ்) தலைமையிடத்தை இந்தியாவுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின் தலைமையிடம், சீனாவில் இருந்துவந்த நிலையில், தற்போது அதன் தலைமையிடம் இந்தியாவுக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அவையின் கீழ் இயங்கும் ’உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்(எஃப்ஏஓ) தேயிலைக்கான சர்வதேச அரசுகளின் குழுவின் 25-வது அமர்வு அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், அப்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அவையின் கீழ் இயங்கும் ’உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்(எஃப்ஏஓ) தேயிலைக்கான சர்வதேச அரசுகளின் குழுவின்’ தலைமைப் பொறுப்பிலிருந்த பிரிட்டனிடமிருந்து, அதன் தலைமைப் பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. இரண்டாண்டுகள் தலைமைப் பதவி வகிக்கும் இந்தியாவை தொடர்ந்து, இதன் தலைமைப் பதவியை இலங்கை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT