இந்தியா

முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது!

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும்  சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

DIN

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும்  சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், "நமது முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு சிறந்த அரசியல்வாதியாக, நரசிம்ம ராவ் அவர்கள் பல்வேறு பதவிகளில் இருந்து பணியாற்றினார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், பல ஆண்டுகளாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் நினைவில் உள்ளது. 

அவரது தொலைநோக்கு பார்வை இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேற்றி, நாட்டின் வளத்திற்கும், வளர்ச்சிக்கும் உறுதியான அடித்தளத்தை அமைக்க முக்கிய பங்கு வகித்தது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள், முக்கியமான மாற்றங்களின் மூலம் இந்தியாவை வழிநடத்தியது" எனத் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கும் பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளத்தில் அவரது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT