முன்னாள் எம்.எல்.ஏவுக்குக் கொலை மிரட்டல்!
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் விடப்படுவதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ரோசன் லால் வர்மாவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் விடப்படுவதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தன்னிடமும் தன் மகளிடமும் தகாத முறையில் பேசியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வர்மா கூறுவதாவது, 'எனக்கு பல்வேறு தொலைபேசி எண்களிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கிறது. என்ன கூறினாலும் தொடர்ந்து என்னைத் தகாத வார்த்தைகளால் துன்புறுத்தினர்.'
மேலும், இந்த துன்புறுத்தலாம் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். 10 வெவ்வேறு எண்களிலிருந்து அழைப்புகள் வந்திருப்பதாகவும் அந்த எண்களை அவர் குறித்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரை காவல் கண்காளிப்பாளர் அசோக் குமார் மீனாவிடம் அளித்துள்ளதாக அவர் கூறினார். அதன் பிறகு சனிக்கிழமை காலை இரண்டு எண்களில் இருந்து அழைப்புகள் வந்ததாகவும், அந்த அழைப்பை எடுத்துப் பேசிய தன் மகளிடம் தகாத முறையில் பேசியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விசாரணை சைபர் செல்லுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தீவிரமாக நடந்துவருவதாக காவல்கண்காணிப்பாளர் மீனா தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.