கோப்புப்படம்
கோப்புப்படம் 
இந்தியா

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

DIN

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படும் நிலையில், வரும் பிப். 18 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜைகள் நிறைவுபெற்று நடை அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று திறக்கப்படவுள்ளது.

மாசி மாத பூஜைக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகர விளக்கு சீசனில் சுமாா் 50 லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்ததாகவும் திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு முன்னதாக தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT