ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  
இந்தியா

மாநிலங்களவை தேர்தல்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மனு தாக்கல்!

DIN

பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ஒடிசாவிலிருந்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.

ஒடிசா சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மாநிலங்களவை தேர்தல் அதிகாரி அபனிகாந்த் பட்நாயக்கிடம் வைஷ்ணவ் தனது ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

ஆளும் பிஜேடி 2019-ம் ஆண்டு செய்ததைப் போலவே மாநிலங்களவை தேர்தலில் வைஷ்ணவின் வேட்புமனுவுக்கு ஆதரவளிப்பதாக புதன்கிழமை அறிவித்தது.

ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் வைஷ்ணவ், பாஜக மாநிலத் தலைவர் மன்மோகன் சமால் மற்றும் 13 கட்சி எம்எல்ஏக்களுடன் தனது ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அமர் பட்நாயக் மற்றும் பிரசாந்த் நந்தா ஆகியோரின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.

மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT