முகப்பு
இந்தியா

தில்லி ஐஐடியில் எம்.டெக் மாணவர் தற்கொலை!

தில்லி ஐஐடியில் 23 மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 16 பிப்ரவரி, 2024 at 7:31 AM
அரக்கோணம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை 
பகிர்:

வரத் சஞ்சய் நெர்கர்(23) என்ற மாணவர் எம்.டெக் இறுதியாண்டு பயின்று வந்தார். இவர் மகாராஷ்டிரத்தின் நாசிக்கைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

மாணவர் தற்கொலை குறித்து ஐஐடி விடுதிக்கு எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சஞ்சயின் தொலைபேசியை அணுக முடியாததால், அவரது நண்பர் ஒருவர் ஐஐடி வளாகத்தின் பாதுகாப்பு ஊழியர்களுடன் சேர்ந்து கதவை உடைத்தபோது, மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சஞ்சய் காணப்பட்டார்.

தற்கொலைக்கான கடிதம் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை. வேறு சந்தேகத்திற்கு இடமான தடயங்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →