விருதுநகர் பட்டாசு விபத்து: பிரதமர் மோடி நிதியுதவி
விருதுநகர் அருகே பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்: "விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த விபத்து குறித்து கனத்த இதயத்துடன் அறிந்தேன். இந்த கடினமான நேரத்தில், எனது எண்ணங்கள் துயரமாக காலமானவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உடல் கருகிய நிலையில் இன்று பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.