முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரணம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 20 ஏப்ரல், 2026 at 10:02 PM
பட்டாசு ஆலை வெடி விபத்து நேர்ந்த இடத்தில் தீயை அணைக்கும் வீரர்கள் - எக்ஸ்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:58 PM

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா இன்று (ஏப். 20) அறிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (ஏப். 19) பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டது.

பட்டாசு மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மருந்து உராய்வு காரணமாக வெடி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அருகருகே இருந்த 4 அறைகளும் இடிந்து தரைமட்டமாகின.

Advertisement

அறைக்குள் குறுகிய இடத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் பணிசெய்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபத்தில், 25 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மீண்டும் பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசு சார்பிலும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என, சம்பவ இடத்தை ஆய்வு செய்த பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Virudhunagar Firecracker Factory Accident: Relief for Families of Victims

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.