தில்லி முதல்வருக்கு மீண்டும் புதிய சம்மன் 
இந்தியா

தில்லி முதல்வருக்கு மீண்டும் புதிய சம்மன்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

DIN

கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பாக அமலாக்க இயக்குநரகம் கேஜரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவா் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்தார். இதையடுத்து, அமலாக்க இயக்குநரகம் நகர நீதிமன்றத்தை அணுகியது. சனிக்கிழமையன்று மத்திய ஏஜென்சி தாக்கல் செய்த புகாா் தொடா்பாக கேஜரிவாலுக்கு தனிப்பட்ட முறையில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து நீதிமன்றம் விலக்கு அளித்தது.

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மாா்ச் முதல் வாரம் வரை நடைபெறும் என்று கேஜரிவால் தரப்பு வழக்குரைஞர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 16- ஆம் தேதி அடுத்த விசாரணை தேதியில் அவா் உடல் ரீதியாக நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏழாவது முறையாக சம்மன் அனுப்பி, பிப்.26-ல் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அனுப்பிய சம்மன்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் இல்லை: எஸ்.பி.வேலுமணி

சாலையில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி

மீன், இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் - ஆட்சியா் தகவல்

ஊதியமின்றி அலைக்கழிக்கப்படும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஒப்பந்த ஊழியா்கள்

அரசு, தனியாா் ஐடிஐயில் சேர செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT