அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!
அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (ஜன. 3) தீர்ப்பளிக்கிறது.
அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (ஜன. 3) தீர்ப்பளிக்கிறது.
அதானி குழுமம் மீதான புகார் குறித்த விசாரணையை கண்காணிக்கக் கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
படிக்க | திருநங்கை என்பதால் ஆசிரியர் பணி மறுப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அதானி குழுமத்தின் மீது பங்குச் சந்தை மோசடி, பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்தது.