முகப்பு
இந்தியா

நாட்டில் ஜெ.என்.1 கரோனா பாதிப்பு 511 ஆக உயர்வு! 

இந்தியாவில் ஜெ.என்.1 கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளதாக நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
கோப்புப் படம்.
பகிர்:

இந்தியாவில் ஜெ.என்.1 கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளதாக நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனாவின் புதிய திரிபான ‘ஜெஎன்.1’ தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் இப்புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் வெளியிட்ட தகவலில், 

கேரளத்தில் முதல்முறையாக அண்மையில் கண்டறியப்பட்ட புதிய வகை ஜெஎன்.1 புதிய துணைத் திரிபு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 2 நிலவரப்படி கர்நாடகத்தில் 199, கேரளத்தில் 148, கோவாவில் 47, குஜராத்தில் 36, மகாராஷ்டிரத்தில் 32 பேர் என 11 மாநிலங்களில் மொத்தம் 511 பேருக்கு தொற்று பரவியுள்ளது. 

தில்லியில் 15, ராஜஸ்தானில் 4, தெலங்கானத்தில் 2, ஒடிசா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்ப்டடுள்ளனர். 

தமிழகத்தில் மட்டும் ஜெ.என்.1 கரோனாவுக்கு இதுவரை 26 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →