முகப்பு
இந்தியா

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நிதீஷ் குமார்? இன்று ஆலோசனை

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
பகிர்:

புதுதில்லி: ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இதுவரை 4 முறை நேரில் ஆலோசித்துள்ளனர்.

புதுதில்லியில் கடைசியாக நடைபெற்ற கூட்டத்தில் ஜனவரி இரண்டாவது வாரத்துக்குள் தொகுதி பங்கீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல், கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கிடையே, தில்லி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை மம்தா பானர்ஜியும், அரவிந்த் கேஜரிவாலும் முன்வைத்ததற்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து காணொலி வாயிலாக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தின் முடிவில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →