முகப்பு
இந்தியா

கரோனா: புதிய தொற்று எண்ணிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Updated On : 6 ஜனவரி, 2024 at 11:11 AM
பகிர்:

புது தில்லி: கரோனா தொற்று புதிதாக ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 774 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,187 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் என இரண்டு பேர் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

டிச.5 -க்கு முன்பு இரட்டை இலகத்தில் இருந்த எண்ணிக்கை அதன் பிறகு அதிகரிக்க தொடங்கியது. டிச.31 அன்று அதிகபட்சமாக 841 என்ற எண்ணிக்கையில் புதிய தொற்று கண்டறியப்பட்டது.

Advertisement

லட்சக்கணக்கில் தொற்று பரவிருந்த 2020-ம் ஆண்டு முதல் இதுவரை இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 4.5 கோடி பேர் எனவும் இதிலிருந்து மீள்பவர்களின் சதவிகிதம் 98.81 ஆக உள்ளதாகவும் மத்திய அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.