கோப்புப்படம் 
இந்தியா

கடும் குளிர்: தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

கடும் குளிர் காரணமாக திரையில் பள்ளிகளுக்கு ஜனவரி 10ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

கடும் குளிர் காரணமாக திரையில் பள்ளிகளுக்கு ஜனவரி 10ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், காலை வேளைகளில் அடா் மூடுபனி நிலவி வருகிறது. இதனால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குளிர்கால விடுமுறைக்குப் பிறகு தில்லியில் பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி கல்வி அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பதவில், குளிர் காலநிலை காரணமாக நர்சரி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அடுத்த 5 நாள்களுக்கு மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தலைநகர் தில்லியில் அடுத்த சில நாள்களுக்கு அடர்த்தியான மூடுபனி, குறைந்த வெப்பநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

திருவள்ளூர்: ரூ.1.05 கோடியில் 95,000 மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்

கணவரை காா் ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: மனைவி கைது

தொழில்நுட்பப் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,737 போ் பங்கேற்பு

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

SCROLL FOR NEXT