இந்தியா

தில்லியில் கடும் மூடுபனியால் ரயில் சேவைகள் பாதிப்பு!

DIN

தில்லியில் தொடர்ந்துவரும் அடர்ந்த மூடுபனியால் ஏறத்தாழ 24 ரயில்கள் தாமதமாக தில்லியை வந்தடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ரயில்வே அளித்த தகவலின்படி 4 ரயில்கள் 4 மணிநேரம் தாமதமாகியுள்ளது. மேலும் 4 ரயில்கள் 2.15 மணிநேரம் தாமதமாகியுள்ளது. அஜ்மீர் கத்ரா பூஜா எக்ஸ்பிரஸ் 6 மணிநேரம் தாமதமாகியுள்ளது. 

ஏறத்தாழ 13 ரயில்கள் 1 முதல் 1.15 மணிநேரம் தாமதமாகியிருப்பதாக ரயில்வே தெரிவிக்கிறது. சஹர்சா - தில்லி வைஷாலி எக்ஸ்பிரஸ் மற்றும் அம்பேத்கர் நகர் - காட்ரா எக்ஸ்பிரஸ் 3.15 மணிநேரம் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் 3 முதல் 4 நாள்களுக்கு வடமேற்கு இந்தியாவில் அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டங்கள் காணப்படும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் மிக மிக கடுமையான குளிர் இன்றுமுதல் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவீதா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான உச்சி மாநாடு

திருவாரூரில் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு

பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் திறப்பு

இன்று முதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

மழை வெள்ளத்தில்...

SCROLL FOR NEXT