கோப்புப்படம். 
இந்தியா

தில்லியில் தரையிறங்காத 8 விமானங்கள்!

தில்லியில் நிலவிவரும் மோசமான வானிலையால் 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வழி மாற்றப்பட்டன. 

DIN

தில்லியில் நிலவிவருக் மோசமான வானிலையால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனியால் பார்க்கும் திறன் குறைவாகியிருப்பதால் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

தில்லியின் மோசமான வானிலையால் விமானங்கள் தரையிறக்கப்பட முடியாமல், வேறு இடங்களுக்கு வழி மாற்றப்படுகின்றன. 7 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு விமானம் மும்பைக்கும் வழி மாற்றியனுப்பப்பட்டு அங்கு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளன. 

ஆர்.கே. புரம் பகுதியில் அதிகாலை நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 7 டிகிரி செல்சியல் பதிவாகியுள்ளது.  இந்நிலையில் வீடில்லாமல் தெருக்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு இரவு தங்குவதற்கான இடங்களை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அந்த தங்குமிடங்களில் கம்பளிகள், சுடுதண்ணீர் மற்றும் உணவு போன்றவை வழங்கப்பட்டுவருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT