இந்தியா

ம.பி.யில் சாலைத்தடுப்பில் கார் மோதியது: 4 பேர் பலி! 

மத்தியப் பிரதேசத்தின், ஷிவ்புரி மாவட்டத்தில் கார் சாலைத்தடுப்பில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

DIN

மத்தியப் பிரதேசத்தின், ஷிவ்புரி மாவட்டத்தில் கார் சாலைத்தடுப்பில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

திங்கள் இரவு மாவட்டத்தின் பதர்வாஸ் நகரின் புறவழிச்சாலையில் விபத்து நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடும் மூடுபனி காரணமாக காண்புத்திறன் குறைபாட்டினால் கார் சாலைத்தடுப்பில் மோதியது. 

பலியானவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் ஷிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார், காயமடைந்தவர்கள் குணாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

மேலும் விசாரணை நடந்து வருவதாக பதர்வாஸ் காவல் நிலைய பொறுப்பாளர் ரவி சௌகான் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT