இந்தியா

ம.பி.யில் சாலைத்தடுப்பில் கார் மோதியது: 4 பேர் பலி! 

மத்தியப் பிரதேசத்தின், ஷிவ்புரி மாவட்டத்தில் கார் சாலைத்தடுப்பில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

DIN

மத்தியப் பிரதேசத்தின், ஷிவ்புரி மாவட்டத்தில் கார் சாலைத்தடுப்பில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

திங்கள் இரவு மாவட்டத்தின் பதர்வாஸ் நகரின் புறவழிச்சாலையில் விபத்து நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடும் மூடுபனி காரணமாக காண்புத்திறன் குறைபாட்டினால் கார் சாலைத்தடுப்பில் மோதியது. 

பலியானவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் ஷிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார், காயமடைந்தவர்கள் குணாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

மேலும் விசாரணை நடந்து வருவதாக பதர்வாஸ் காவல் நிலைய பொறுப்பாளர் ரவி சௌகான் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT