இந்தியா

தில்லி அரசைக் கவிழ்க்க பாஜக சதி: அரவிந்த் கேஜரிவால்

DIN

புது தில்லி: தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வர் அரவிந்த கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 7 பேரிடம் ஆளுக்கு தலா ரூ.25 கோடி பேரம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த கேஜரிவால் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், 21 எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாகவும் ரூ.25 கோடி வரை அவர்கள் கட்சியிலிருந்து விலகத் தருவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களும் பாஜகவின் கோரிக்கையை மறுத்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக தில்லியில் தங்கள் ஆட்சியைக் கவிழ்க்க அவர்கள் முயற்சி செய்வதாகவும் அவையெல்லாம் தோல்வியில் முடிவதாகவும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

மதுபான வழக்கில் தன்னை கைதுசெய்யும் திட்டமும் இந்த முயற்சியின் பகுதிதான் என அவர் சுட்டியுள்ளார்/

இதனை மறுத்த தில்லி பாஜக செயலர் ஹரிஸ் குரானா, ஆம் ஆத்மி யாரிடமெல்லாம் பேரம் பேசப்பட்டது என்பதையும் யார் பாஜகவில் இருந்து பேசினார்கள் என்கிற விபரத்தையும் வெளியிடுமாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை விசாரணையின் மீதான கவனத்தைத் திசை திருப்ப முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT