முகப்பு
இந்தியா

உ.பி. கூட்ட நெரிசல் பலி நெஞ்சை பதற வைக்கிறது -திரௌபதி முர்மு

உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது நெஞ்சை பதற வைக்கிறது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

Updated On : 2 ஜூலை 2024, 7:00 pm IST
திரௌபதி முர்மு
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாத்ரஸ் மாவட்டம், முகல்கர்ஹி கிராமத்தில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.