ஹேமந்த் சோரன் 
இந்தியா

ஜூலை 7ல் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்...

DIN

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜூலை 7-ம் தேதி மீண்டும் ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.

ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரன் புதன்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக 7-ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது.

நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜன.31-ஆம் தேதி கைது செய்தது. அதற்கு முன்பு அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடா்ந்து, ஜேஎம்எம் கட்சியைச் சோ்ந்த சம்பயி சோரன் மாநில முதல்வராகப் பதவியேற்றாா்.

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 28-ஆம் தேதி மாநிலத் தலைநகா் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள சம்பயி சோரன் இல்லத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜேஎம்எம் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரனை தேர்வு செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஜாா்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனே மீண்டும் பதவியேற்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT