அமர்நாத்: 5 நாள்களில் ஒரு லட்சம் பேர் தரிசனம்!
அமர்நாத் யாத்திரை தொடங்கி நிலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்.
வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் 5 நாள்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
2024-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. அமர்நாத் யாத்திரையில் இந்தாண்டு முந்தைய ஆண்டுகளை விடக் கூடுதலான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து நாள்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் 5,696 பேர் கொண்ட மற்றொரு குழு இன்று காலை காஷ்மீருக்கு புறப்பட்டது.
Advertisement
Advertisement
2028 பேர் கொண்ட குழு 97 வாகனங்களில் வடக்கு காஷ்மீர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.13-க்கு புறப்பட்டது. 3,668 பேர் மற்றொரு குழு தெற்கு காஷ்மீர் நுன்வான் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.40 மணிக்கு 122 வாகனங்களில் புறப்பட்டனர்.
குகை லிங்கத்தைத் தரிசிக்க இந்தாண்டு சுமார் 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 52 நாள்கள் நடைபெறும் புனித யாத்திரை சுமுகமாக நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.