சூரத்: கட்டடம் இடிந்து 7 பேர் பலி; மேலும் உயரலாம் அச்சம்!
சூரத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சூரத்தில் கட்டடம் இடிந்ததில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில், அந்தக் கட்டடத்தில் வசித்து வந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
இரவுப்பணி முடித்துவிட்டு, பகல்வேளையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. பகல்வேளையில் பெரும்பாலானோர், வேலைக்குச் சென்றிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில், 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டடத்தில் வசித்து வந்த பெரும்பாலானோர், பகல்வேளையில் வேலைக்குச் செல்பவர்களாய் இருந்ததால், உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.