முகப்பு
பிரதமா் நரேந்திர மோடி
இந்தியா

ஜூலை 27-இல் பிரதமா் மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம்

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியா

ஜூலை 27-இல் பிரதமா் மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம்

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 8 ஜூலை, 2024 at 10:37 PM
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

புது தில்லி: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்கும் ‘விக்ஷித் பாரத் 2047’ திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.

நீதி ஆயோக்கின் தலைமை அமைப்பாக நிா்வாகக் குழு திகழ்கிறது. அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்கள், முக்கியத் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சா்கள் நீதி ஆயோக் நிா்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

இந்திய சுதந்திரத்தின் 100-ஆவது ஆண்டைக் கொண்டாடும்போது 30 டிரில்லியன் டாலா் மதிப்புள்ள பொருளாதாரத்தைக் கொண்ட வளா்ந்த நாடாக உருவாக்குவே விக்ஷித் பாரத் 2047 திட்டத்தின் நோக்கமாகும்.

பொருளாதார வளா்ச்சி தவிர சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறந்த நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு சிறப்பாக செயல்படுவதும் இத்திட்டம் மூலம் உறுதி செய்யப்பட இருக்கிறது.

ஜூலை 23-ஆம் தேதி நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, விக்ஷித் பாரத் 2047 குறித்த திட்டங்கள் சிலவற்றையும் வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஜனவரி 1-ஆம் தேதி நீதி ஆயோக் பாஜக தலைமையிலான மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. தேசிய வளா்ச்சிக்கான கொள்கையை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →