இருநாட்டு உறவுகள்: மோடி - புதின் பேச்சு!
தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம் என்று மோடி உறுதி.
இந்தியாஇருநாட்டு உறவுகள்: மோடி - புதின் பேச்சு!
தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம் என்று மோடி உறுதி.
மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
விளாதிமீர் புதினின் அழைப்பின் பேரில் இரண்டு நாள்கள் பயணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு திங்கள்கிழமை பிரதமர் மோடி சென்றடைந்தார்.
மாஸ்கோ விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட மோடிக்கு ரஷிய அதிபர் புதின் நேற்றிரவு விருந்தளித்தார்.
இன்று காலை மாஸ்கோவில் புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா - ரஷியா இடையேயான 22-வது உச்சி மாநாட்டில் தற்போது பங்கேற்றுள்ளார்.
இருநாட்டு உறவுகள் குறித்தும் மோடியும் புதினும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருநாட்டின் அரசு அதிகாரிகளும் உடனிருக்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது பேசிய மோடி, தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருவதால் அதன் வலி புரியும் என்றும், எந்த வடிவத்திலும் தீவிரவாதத்தை எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.
ரஷியா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக மாஸ்கோவுக்கு மோடி சென்றுள்ளதால் உலக நாடுகள் மத்தியில் இந்தப் பேச்சுவார்த்தை கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை முடிந்தவுடன் மாஸ்கோவில் இருந்து ஒருநாள் பயணமாக ஆஸ்திரியா செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர், பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.