இந்தியா

ஸ்மிருதி இரானி உள்பட எந்தவொரு தலைவரையும் அவமதிக்கக் கூடாது -ராகுல் அறிவுறுத்தல்

அமேதியில் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானியை அவமதிக்கக் கூடாது -ராகுல் அறிவுறுத்தல்

DIN

மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்திலுள்ள அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வியடைந்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து அமேதியிலும் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில், சமீபத்தில் முடிவடைந்துள்ள மக்களவை தேர்தலில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து களமிறக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் கிஷோரி லால் ஷர்மா 1.60 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்த தோல்வி ஸ்மிருதி இரானிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீதான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்தக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் நிகழ்வது சகஜம். இந்த நிலையில், ஸ்மிருதி இரானி குறித்து அவதூறான கருத்துக்களை பயன்படுத்தக் கூடாது என்றும், அதேபோல எந்தவொரு அரசியல் தலைவர் மீதும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கக் கூடாது என அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

மனிதர்களை அவமதிப்பது பலவீனத்தின் அடையாளமே தவிர, வலிமையின் அடையாளம் அல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT