முகப்பு
இந்தியா

மத்திய கல்வித் துறை அமைச்சரை சந்தித்த நீட் மாணவர்கள்: என்ன பேசினார்கள்?

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீட் மாணவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

Updated On : 12 ஜூலை, 2024 at 2:40 AM
நீட் விவகாரம் - கோப்புப்படம்
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசினர்.

நீட் தேர்வு தொடர்பாக எழுந்திருக்கும் பிரச்னைகள் தொடர்பாக, நீட் மாணவர்கள் குழு ஒன்று நேற்று புது தில்லியில் உள்ள தர்மேந்திர பிரதான் இல்லத்துக்குச் சென்று மத்திய அமைச்சரை சந்தித்து, தங்களது கவலைகளைத் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுதியிருக்கும் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை மத்திய அமைச்சரிடம் எடுத்துச் சொல்லியிருக்கும் மாணவர்கள், சில விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சரிடமிருந்து விளக்கத்தைக் கேட்டுப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களின் பிரச்னைகளைக் கேட்ட மத்திய அமைச்சர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், தேர்வுகள் முறையாக நடப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் மத்திய அமைச்சர் உறுதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் மீது, மனுதாரர்கள் பதிலளிக்க கால அவகாசம் கொடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நீட் வினாத்தாள்கள் எங்கும் கசிந்ததாக ஆதாரம் இல்லை, ஒவ்வொரு வினாத்தாளும், ஒரு மாணவரின் பதிவு எண்ணுடன் பிரிண்ட் செய்யப்படுகிறது. எங்கும் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படவில்லை. தேசிய தேர்வு முகமை பார்வையாளர்களும் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. அனைத்து தேர்வு மையங்களும் சிசிடிவி கேமராக்கள் மூல கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது என்று தெரிவித்திருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →