முகப்பு
இந்தியா

கவிதாவுக்கு உடல்நல பாதிப்பு: மருத்துவமனையில் பரிசோதனை

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி பிரமுகா் கவிதாவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:23 PM
கவிதா
பகிர்:

புது தில்லி: தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி பிரமுகா் கவிதாவுக்கு செவ்வாய்க்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்றக் காவலில் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரை சிறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனா்.

அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரின் உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்த நிலையில், 2 மணி நேரத்துக்குப் பின்னா், அவா் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →