வாலுடன் பிறந்த குழந்தை! உலகில் 41வது அறுவை சிகிச்சை!
தெலங்கானாவில் வால் உடன் பிறந்த குழந்தைக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
தெலங்கானாவில் வால் உடன் பிறந்த குழந்தைக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
3 மாத குழந்தையின் வாலை, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக எய்ம்ஸ் மருத்துவர்கள் நீக்கினர்.
தெலங்கானா மாநிலம் பிபிநகரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், கடந்த ஜனவரி மாதம் இக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தைகள் நல மருத்துவ அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர்கள் குழு, வாலுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
Advertisement
Advertisement
அறுவை சிகிச்சையானது குழந்தையின் உள்ளுறுப்புகளின் (மூளை, இதயம், குடல், நுரையீரல்) வளர்ச்சியை பாதிக்கவில்லை என்றால் மட்டுமே இது வெற்றிகரமான அறுவை சிகிச்சை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், கடந்த 6 மாதங்களாக குழந்தையை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
தற்போது, இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
பிபிநகர் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைத் துறை தலைவர் சஷாங்க் பாண்டா கூறியதாவது, இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் உலகில் இதுவரை 40 முறை மட்டுமே வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளன. கடைசியாக சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிபிநகர் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை உலகின் 41வது வெற்றிகரமான அறுவை சிகிச்சையாகியுள்ளது என்றார்.
வால் உடன் பிறந்த குழந்தை ஓக்குலட் முதுகெலும்பு டிஸ்ராபிசத்தால் (ஓ.எஸ்.டி.) பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவத் துறையில் ஓக்குலட் என்பதை கண்ணுக்கு புலப்படாத வளர்ச்சி எனலாம். முதுகெலும்பு அல்லது தண்டுவடத்தில் இயல்புக்கு மாறான உருவாக்கம் மறைந்தோ அல்லது உடனடியாகத் தெரியாமலோ இருக்கும் (தோல் மீது தெரியாமல் இருக்கும்) நிலையே ஓக்குலட் எனப்படுகிறது.
முதுகெலும்பு டிஸ்ராபிசம்
இயல்புக்கு மாறாக அசாதாரண வளர்ச்சி பெற்ற எலும்புகள், ஒன்றிணைந்து முதுகுத்தண்டில் முழுமை பெறாமல் இருப்பது முதுகெலும்பு டிஸ்ராபிசம் எனப்படுகிறது. இந்த நிலையில், முதுகெலும்பின் சில பாகங்கள் முழுமையான வளர்ச்சி பெறாமல் போக வாய்ப்புள்ளது. இது தண்டு வடத்திலும், நரம்புகளிலும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.