முகப்பு
இந்தியா

மட்டனுக்கு பதிலாக நாய் இறைச்சி விற்பனை? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

உணவகம் ஒன்றில் மட்டனுக்கு பதிலாக நாய் இறைச்சி விற்பனை? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Updated On : 27 ஜூலை 2024, 7:56 pm IST
- கோப்புப்படம்
பகிர்:

ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெங்களூரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக இந்துத்துவா அமைப்புகள் சில வெள்ளிக்கிழமை(ஜூலை 26) புகாரளித்துள்ளன.

நாய் இறைச்சி ஜெய்ப்பூர் - மைசூரு விரைவு ரயில் மூலம் ராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மேற்கண்ட அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. மேலும், கடந்த 12 ஆண்டுகளாக அந்த கடையில் நாய் இறைச்சி விற்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கே 90 பார்சல்கள் ரயிலிலிருந்து வந்திறக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மேற்கண்ட புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை ஆணையர் முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அந்த கடையிலிருந்த இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வெளியானபின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments