வேலைவாய்ப்பின்மை குறையும்: மத்திய அமைச்சர்
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்படும் என்று மத்திய தொழில்துறை அமைச்சர் பேச்சு
வருகிற காலங்களில் வேலைவாய்ப்பின்மை படிப்படியாக குறையும் என்று மத்திய தொழில்துறை அமைச்சர் மக்களவையில் கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று (ஜூலை 29) நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் 2017 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை 6 சதவிகிதமாக இருந்தது; தற்போது, 3.2 சதவிகிதமாக உள்ளது.
இனிவரும் காலங்களில் 3 சதவிகிதக்கும் கீழ் குறையும் என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், 2017 முதல் 2018 வரையில் தொழிலாளர் பங்களிப்பு 38 சதவிகிதத்திலிருந்து 44 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
வேலை இழப்புகள் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை; வேலைகள் பற்றாக்குறையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.