முகப்பு
இந்தியா

மக்களவைத் தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

Updated On : 4 ஜூன், 2024 at 12:15 PM
- பி.டி.ஐ.
பகிர்:

புது தில்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி இதுவரை 238 தொகுதிகளுக்கும் அதிகமாக அதாவது பெரும்பான்மை இடங்களில் முன்னிலையிலும், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேஜகூ 238 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

Advertisement

இந்தியா கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதன் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி 33 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திரிணமூல் 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக 35 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கூட்டணியான ராஷ்ட்ரிய லோக் தளம் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வென்றிருந்தது. இதில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. எதிர்க்கட்சிக் கூட்டணி 93 தொகுதிகளிலும் காங்கிரஸ் 52 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தது.

இந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 64 கோடி மக்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.