பிரதமர் நரேந்திர மோடி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் 36 தொகுதிகளில் சமாஜவாதி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் பாரதிய ஜனதா 32 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் ராஷ்ட்ரீய லோக் தளம் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இதில் பிரதமர் மோடி 3வது முறை போட்டியிடும் வாராணசி தொகுதியில் 2,44,622 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 1,72,489 வாக்குகளைப் பெற்றுள்ளார். (12 மணி நிலவரம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.