கோப்புப் படம் 
இந்தியா

ஆந்திரப் பேரவைத் தேர்தல்: தெலுங்கு தேசம் முன்னிலை

ஆந்திரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை

Sakthivel

ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலில், ஆளுங்கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஜனசேனா 15 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான பாஜக நான்கு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காலை 11.30 மணியளவில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவெண்டுலா சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசக் கட்சியை விட 5,175 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். சந்திரபாபு நாயுடு 893 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். மங்களகிரியில், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் 8,411 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். நீர்ப்பாசன அமைச்சரும் ஒய்எஸ்ஆர்சிபி மூத்தத் தலைவருமான ராம்பாபுட் 2,442 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT