ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலில், ஆளுங்கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஜனசேனா 15 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான பாஜக நான்கு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலை 11.30 மணியளவில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவெண்டுலா சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசக் கட்சியை விட 5,175 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். சந்திரபாபு நாயுடு 893 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். மங்களகிரியில், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் 8,411 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். நீர்ப்பாசன அமைச்சரும் ஒய்எஸ்ஆர்சிபி மூத்தத் தலைவருமான ராம்பாபுட் 2,442 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.