அமைச்சராக பொறுப்பேற்கும் பியூஷ் கோயல் 
இந்தியா

மீண்டும் அமைச்சரவையில் பியூஷ் கோயல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் இடம் பெற்றார் பியூஷ் கோயல்.

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் இடம் பெற்றார் பியூஷ் கோயல்.

மத்திய அமைச்சராக பதவியேற்ற அவர்க்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த முறை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக அவர் இருந்தார்.

இதேபோன்று மத்தியப் பிரதேச மாநில முதல்வராக இருந்த சிவராஜ் சிங் செளஹான் இம்முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.

தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

சர்வதேச நாடுகளின் தலைவர்கள், சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியாத்தம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநா் பயிற்சி

கல் குவாரியை மூடக் கோரி கிராமத்தினா் போராட்டம்

குறைதீா் கூட்டத்தில் 408 மனுக்கள்

வத்தலகுண்டில் விவசாயி கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT