சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ண குமாரி ராய், தான் பதவியேற்ற அடுத்த நாளே தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவரது இந்த திடீர் முடிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
கிருஷ்ண குமாரி ராய் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா சார்பில் நாம்ச்சி-சிங்கிதாங் தொகுதியில் சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளர் பிமல் ராயை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
கிருஷ்ண குமாரி ராயின் ராஜிநாமாவை சட்டப்பேரவைத் தலைவர் எம்.என்.ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக சிக்கிம் சட்டப் பேரவை செயலாளர் லலித் குமார் குருங் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி தொடர்பான கருத்துகளுக்கு அவரையோ, ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைமையையோ தொடர்பு கொள்ள முடியவில்லை.
சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவருமான பிரேம் சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் நாம்ச்சி-சிங்கிதாங் சட்டப் பேரவைத் தொகுதியில் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் (எஸ்டிஎஃப்) பிமல் ராயை 5,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.