முகப்பு
இந்தியா

கொல்கத்தா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

இந்தியா

கொல்கத்தா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

Updated On : 14 ஜூன், 2024 at 9:30 AM
பகிர்:

கொல்கத்தாவின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து நேரிட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

வணிக வளாகத்தில் இயங்கி வந்த உணவு வளாகத்தில் தீ பரவியதால், அங்கு ஏராளமானோர் தீயில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த வணிக வளாகத்துக்குள் தீ விபத்து நேரிட்ட போது, அங்கிருந்த மக்கள் அங்கும் இங்கும் ஓடும் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.

இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. ஆக்ஸிஜன் கவசம் அணிந்தபடி தீயணைப்பு வீரர்கள் கட்டடத்துக்குள் நுழைந்திருப்பதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

தீ விபத்து நேரிட்டதும், வணிக வளாகம் முழுவதும் பயங்கர புகை மூட்டம் சூழ்ந்துகொண்டது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மீட்புப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தின.

பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →