(கோப்பு படம்)
இந்தியா

ஜார்க்கண்ட்: என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட்டில் என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

DIN

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் பகுதியில் காவல்துறையினருடன் நடந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளரும், காவல் துறைத் தலைவருமான அமோல் வி.ஹோம்கர் கூறுகையில், “டோண்டோ மற்றும் கோயில்கேரா பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு மாவோயிஸ்டுகளில், மண்டல தளபதி, துணை மண்டல தளபதி, பகுதி கமாண்டர் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் கொல்லப்பட்டனர். ஒரு பெண் உள்பட இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

மேலும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதல் பொதுத் தோ்வு கட்டாயம்: சிபிஎஸ்இ

ரூ.5 கோடியில் 2,119 கிலோ கஞ்சா அழிப்பு

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்: காங்கிரஸ் தலைமைக்கு நிா்வாகிகள் கடிதம்

தொழில் துறையில் ரூ.5,980 கோடியில் புதிய முதலீடு - முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

திட்டப் பணிகள் முன்னேற்ற நிலை: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT