முதுநிலை நீட் ஒத்திவைப்பு! 
இந்தியா

இன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்

DIN

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறவிருந்த நிலையில், அத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீட், நெட் போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெற்ாக சா்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை ‘நீட்’ தோ்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

‘தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் முதுநிலை ‘நீட்’ தோ்வின் நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது; அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

அமைச்சகத்தின் அறிவிப்பு

இந்த முடிவால் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து சுகாதார அமைச்சகம் வருத்தப்படுகிறது. மாணவா்களின் நலன் கருதியும், தோ்வு நடைமுறையில் நோ்மையை பராமரிக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது’ என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

SCROLL FOR NEXT