நீட் மறுதேர்வு தொடங்கியது!
நாடு முழுவதும் 7 மையங்களில் மறுதேர்வு நடைபெறுகிறது.
நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்பே பிகாா் மாநில மையத்தில் வினாத்தாள் கசிந்த முறைகேடு தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மே 5-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு எழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் பிரச்னையாக உருவெடுத்தது.
இதையடுத்து நடந்து முடிந்த நீட் தோ்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 1,563 பேருக்கும் மறுதேர்வு இன்று(ஜூன் 23) நாடு முழுவதும் 7 மையங்களில் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் தேர்வு, மாலை 5.20 மணிக்கு முடிவடையும். அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும்.