பிரஜ்வல் ரேவண்ணா  படம் | ஐஏஎன்எஸ்
இந்தியா

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூலை 8-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூலை 8-ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Din

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூலை 8-ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஜதவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 3 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.), மே 31-ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்து விசாரித்து வருகிறது. இதுவரை 22 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவை எஸ்.ஐ.டி. விசாரித்து வந்தது.

அவருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் காவல் திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு திங்கள்கிழமை பிரஜ்வல் ரேவண்ணா ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, மற்றொரு பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸ் காவலில் ஒப்படைக்குமாறு எஸ்.ஐ.டி. கேட்டுக்கொண்டது.

இதை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், ஜூலை 8-ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் பிரஜ்வல் ரேவண்ணா அடைக்கப்பட்டாா்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT