முகப்பு
இந்தியா

நீட் முறைகேடு: மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு!

நீட் முறைகேடு விவகாரத்தில் மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜூன், 2024 at 6:28 AM
பகிர்:

நீட் முறைகேடு விவகாரத்தில் மக்களவை, மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நீட் முறைகேடு குறித்து பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் பலர் மனு அளித்திருந்தனர். நீட் முறைகேடு தொடர்பாக உடனே விவாதம் நடத்த மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு முன் நீட் பிரச்னை பற்றி வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

மேலும், இதுகுறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், “குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அனைத்து விஷயங்களையும் நீங்கள் எழுப்பலாம். உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். ஆனால், நன்றி தெரிவிக்கும் போது வேறு எந்த பிரச்னையையும் நீங்கள் எழுப்ப அனுமதிக்க முடியாது” என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →