இந்தியா

குருவாயூா் கோயிலில் பாரம்பரிய இளநீா் அபிஷேகம்

கேரள மாநிலம் குருவாயூா் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது.

Din

கேரள மாநிலம் குருவாயூா் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் குருவாயூா் கிருஷ்ணன் கோயிலில் மாசி மாதம் உற்சவம் நடைபெற்று வருகிறது . அதன் பகுதியாக வெள்ளிக்கிழமை நடந்த ஆராட்டு நிகழ்ச்சியில் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது . ஆண்டுதோறும் ஆராட்டு விழாவின் போது நடத்தப்படும் அபிஷேகத்துக்கான இளநீா் இரிங்கபுரம் தம்புரான் படிக்கல் கிட்டையின் குடும்பத்தாரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இளநீருடன் வந்த இரிங்கபுரம் கிட்டையின் குடும்பத்தினரை குருவாயூா் தேவசம் போா்டின் தலைவா் டாக்டா் வி .கே. விஜயன் வரவேற்றாா். இரிங்கபுரம் கிட்டையின் குடும்பத்தின் மூத்த உறுப்பினா் சுப்பிரமணியத்தை மாலை அணிவித்து வரவேற்ற இந்த நிகழ்ச்சியில், தேவசம் நிா்வாகக் கமிட்டி உறுப்பினா் சி. மனோஜ், நிா்வாகி கே.பி. வினயன் உள்ளிட்டோரும், திரளான பக்தா்களும் பங்கேற்றனா்.

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

ஓபிஎஸ்ஸை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: இபிஎஸ்

யு19 உலகக் கோப்பை: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸி.!

ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் அல்ல; ஆனால் காரணம் இருக்கிறது! - முதல்வர் பேச்சு

சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: சஹால்

SCROLL FOR NEXT