இந்தியா

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் மர்மநபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மார்ச் 2 ஆம் தேதி, பாதுகாப்பு தலைமையகத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலர் ஒருவருக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

அப்போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுவார் எனக் கூறி, அந்த நபர் அழைப்பைத் துண்டித்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக மர்மநபர் மீது மகாநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT