ஒமர் அப்துல்லா 
இந்தியா

ஜம்மு-காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை: ஒமர் அப்துல்லா அதிருப்தி

Sasikumar

ஜம்மு-காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது குறித்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தேசமும் எதிர்நோக்கியிருந்த மக்களவைத் தேர்தல் தேதி இன்று(மார்ச் 16) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு கடைசியாக 2014ஆம் ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 10ஆண்டுகளாக பேரவைத் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலை மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும் ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் அம்மாநில மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது குறித்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக எவ்வளவோ செய்கின்றனர். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் நிலுவையில் உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை, தேர்தல் ஆணையத்தால் நடத்த முடியவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

SCROLL FOR NEXT