FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அருணாச்சல், சிக்கிம்: வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே; அருணாச்சல், சிக்கிமில் தேர்தல் தேதி மாற்றம்

Updated On : 17 மார்ச் 2024, 4:32 pm IST
- Center-Center-Delhi
பகிர்:

அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டபேரவைத் தோ்தலும் நடத்தப்பட உள்ளது. மேலும், தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் அடங்கிய 26 பேரவை தொகுதிகளுக்கான இடைத் தோ்தலும் நடைபெறவுள்ளது.

அருணாசல பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும், 60 பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதே நாளில், சிக்கிமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 32 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

ஆந்திரத்தில் 25 மக்களவை மற்றும் 175 பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக மே 13-இல் வாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளது. ஒடிஸாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 பேரவைத் தொகுதிகளுக்கும் மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ஆம் தேதிகளில் நான்கு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 4ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments