மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம்: சிபிஐ விசாரிக்க லோக்பால் உத்தரவு
புது தில்லி: நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ாக எழுந்த புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு சிபிஐக்கு ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப தொழிலதிபா் ஹீரா நந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்ாக பாஜக மக்களவை எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய மக்களவைக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து அவா் பதவிநீக்கம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில் இதுதொடா்பான புகாரை விசாரித்த லோக்பால் அமா்வு நீதிபதி அபிலாஷா குமாா் மற்றும் உறுப்பினா்கள் அா்ச்சனா ராமசுந்தரம், மஹேந்தா் சிங் வெளியிட்ட உத்தரவில், ‘இந்தக் குற்றச்சாட்டின் தன்மை தீவிரமானது. இதற்கு தெளிவான ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
Advertisement
எனவே இக்குற்றச்சாட்டு தொடா்பாக மஹுவா மொய்த்ராவிடம் 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி சிபிஐ அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. மேலும் மாதந்தோறும் விசாரணை நிலை குறித்த அறிக்கையயும் சிபிஐ சமா்ப்பிக்க வேண்டும் என லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது.