தடுப்புக் காவல் கொடூரமான நடவடிக்கை: உச்ச நீதிமன்றம்
ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பது கொடூரமான நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்தபோது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு தெரிவித்ததாவது: குற்றம் செய்யாமல் தடுப்பதற்கு ஒருவா் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறாரே தவிர, தண்டிப்பது தடுப்புக் காவலின் நோக்கம் அல்ல. சட்டம், ஒழுங்கு சூழலை சரிவர பரமாரிக்க முடியாத மாநில காவல் துறையின் இயலாமைக்காக தடுப்புக் காவலை பயன்படுத்த முடியாது.
ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பது கொடூரமான நடவடிக்கை; மனம்போன போக்கில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிறப்பிக்கப்படும் எந்தவொரு தடுப்புக் காவல் உத்தரவும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தடுப்புக் காவல் தொடா்பான எந்தவொரு சட்டத்தின் கீழும், அதிகாரத்தை மிகுந்த கவனம், எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும் எனச் சட்டம் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று தெரிவித்தது.
Advertisement