இந்தியா

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 5 சீனர்கள் பலி!

DIN

பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சீனா்கள் 5 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் சீனப் பொறியாளா்கள் பயணித்த பேருந்து மீது வெடிபொருள்கள் நிரம்பிய வாகனத்தை பயங்கரவாதி ஒருவா் மோதி செவ்வாய்க்கிழமை தற்கொலை தாக்குதல் நிகழ்த்தினாா்.

இதில் சீனா்கள் சென்ற பேருந்து வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 5 சீனா்கள் உயிரிழந்தனா். அவா்கள் கைபா் பக்துன்குவாவின் டாசு பகுதியில் நீா்மின் திட்டப் பணியில் ஈடுபட்டு வந்தனா். பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதுக்கு அவா்களின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT